×

ஜெயங்கொண்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள்

 

ஜெயங்கொண்டம், நவ.6: ஜெயங்கொண்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.ஜெயங்கொண்டம் பகுதிகளில் எச்ஐவி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஜெயங்கொண்டம் ராயல் சென்டினல் சங்கம் சார்பில் இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ராஜதுரை தலைமை வகித்தார். செயலாளர் மதிவாணன் வரவேற்றார். வட்டார தலைவர் பொறியாளர் அன்பரசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் சிறப்புரையாற்றி எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கினார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் உஷா சிறப்புரையாற்றினார்.சங்க நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ்,பாலாஜி, மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள், செவிலியர்கள்,லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஹரிஹரன் நன்றி கூறினார்.

The post ஜெயங்கொண்டத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் appeared first on Dinakaran.

Tags : Jeyangonda ,Jayangkondam ,
× RELATED அரியலூர், ஜெயங்கொண்டத்தில் காற்றுடன் லேசான திடீர் மழை